கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு திட்டம்: கனிமொழி எம்பி தொடங்கினார்

கொரோனா நோயாயளிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

Update: 2021-05-15 03:54 GMT

கொரோனா நோயாளிகளுக்கான இலவச உணவு திட்டத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தபோது.

 தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முன் களப்பணியாளர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு முன்கள பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்.

அப்போது அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி முன்கள பணியாளர்கள், கொரோனா நோயாளிகள் மற்றும் அவருடன் இருப்பவர்களுக்கு தினசரி மூன்று வேளையும் உணவு வழங்க இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காலை உணவு சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் கோவில் நிர்வாகம் சார்பில் 650 பேருக்கும், மதிய உணவு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் ஆயிரம் பேருக்கும், இரவு உணவு குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் சார்பில் 300 பேருக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த அளவு தேவையின் அடிப்படையில் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி மற்றும் அலுவலர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News