விவசாயிகள்(செப்.23) குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு : ஆட்சியர் தகவல்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு ஒத்தி வைக்கப்படுகிறது.

Update: 2021-09-22 03:30 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்.

தூத்துக்குடியில் வருகின்ற 23ம் தேதி நடைபெற இருந்த "விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்" கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் 23.09.2021 அன்று நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு ஒத்தி வைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News