திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

Update: 2021-04-21 11:00 GMT

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் வழங்கினார்.

கொரோனா வைரசின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் திமுகவினர், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், மாஸ்க் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட லூர்தம்மாள் புரம் பகுதியில் திமுக சார்பில் குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டு அதில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் குடிநீர், தர்பூசணி பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மாஸ்க் மற்றும் தர்பூசணி உள்ளிட்டவைகளை வழங்கினார். தொடர்ந்து திரவியபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்கினார். இதை தொடர்ந்து மாநகரின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு திமுக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் அனந்த சேகரன், பகுதி செயலாளர்கள் நிர்மல்ராஜ் ,ஜெயகுமார் , மாநகர வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News