தூத்துக்குடியில் இன்று 884 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
தூத்துக்குடியில் இன்று ஒரேநாளில் 884 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 884 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 29,949 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 891 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 25,429 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு 1, இதுவரை 167 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 4353 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.