சட்ட விரோதமாக மது விற்ற 9 பேர் கைது

Update: 2021-04-18 06:15 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து 69 மதுபாட்டில்களும், ரூ. 2,800 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தென்பாகம், குலசேகரப்பட்டினம், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 4 காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, 9 நபர்கள் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீசார் 9 வழக்குகள் பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 69 மதுபாட்டில்களும், ரூ. 2,800 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News