எஸ்பி., அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்

Update: 2021-03-08 10:45 GMT

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீசாருக்கும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அமைச்சுப்பணியாளர்களில் அலுவலக கண்காணிப்பாளர் மாரியம்மாள் தலைமையில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் என 22 பெண் அமைச்சுப்பணியாளர்கள், மாவட்ட குற்றப்பிரிவு, மாவட்ட குற்ற ஆவண காப்பகம் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆகியவற்றிலிருந்து இன்ஸ்பெக்டர் தேவி, ஜெரால்டின் வினு ஆகியோர் தலைமையில் 15 பெண் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.

மகளிர்தினத்தை முன்னிட்டு மாவட்ட எஸ்பி.,அலுவலகத்தில் மேற்படி மகளிர் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் போலீசார் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் முன்னிலையில் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர்.தொடர்ந்து எஸ்.பி., ஜெயக்குமார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீசார் மற்றும் அமைச்சுப்பணியாளர்களும் அனைத்து வகையான செல்வங்களுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு வாழவும், சிறப்பாக பணியாற்றவும் வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News