முன்னாள் படைவீரர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

Update: 2021-03-02 11:29 GMT

சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்கு உடல் திடகாத்திரம் உள்ள மற்றும் விருப்பம் உள்ள 65 வயதுக்குட்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறவுள்ளதால், பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்களை சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு உடல் திடகாத்திரம் உள்ள மற்றும் விருப்பம் உள்ள 65 வயதுக்குட்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது முன்னாள் படைவீரர் அடையாள அட்டை மற்றும் படைவிலகல் சான்றுடன் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி விருப்ப விண்ணப்பம் சமாப்பிக்கலாம். இப்பணிக்கு அரசு விதிமுறைபடி ஊதியம் மற்றும் உணவுப்படி வழங்கப்படும் என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News