தை அமாவாசை- தூத்துக்குடியில் பொதுமக்கள் தர்ப்பணம்

Update: 2021-02-11 05:30 GMT

தை அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

இந்துக்கள் வழிபாட்டு முறையில், ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் ஆடி, தை அமாவாசைகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி மற்றும் தை அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் முன்னேற்றம் தரும் என்று கூறப்படுகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த தை அமாவாசை தினமான இன்று காலையில் தூத்துக்குடி துறைமுக கடற்கரையில் ஏராளமானோர் கடலில் புனித நீராடினர். அங்கு தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பூஜைகள் நடத்தி வழிபட்டனர். இதே போன்று மாவட்டத்திலுள்ள கடலோரங்களிலும், ஆற்றங்கரையிலும் பல்வேறு இடங்களில் தர்ப்பணம் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News