போதை பொருள் விற்றால் நடவடிக்கை - தூத்துக்குடி எஸ்.பி

Update: 2021-01-30 10:30 GMT

போதைப்பொருள் யார் விற்றாலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் கூறினார்.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தொடக்க நிகழ்ச்சி தென்பாகம் காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் கலந்து கொண்டு சிசிடிவி கேமராக்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகள், முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். கஞ்சா விற்பனை செய்ததாக 10 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். கஞ்சா விற்பனை அதிகம் உள்ள இடங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். போதைப்பொருள் விற்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News