காணாமல் போன தங்கசெயின் சிசிடிவி மூலம் மீட்பு

Update: 2021-01-19 10:15 GMT

தூத்துக்குடியில் திருடு போன தங்க செயினை சிசிடிவி கேமரா மூலம் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா சோனகன்விளை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சம்பத்குமார் (42), இவர் கடந்த டிச.30 ம் தேதி அன்று தனது தாயாரான இன்பமணி (75) என்பவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளனர். அங்கே இன்பமணிக்கு ஸ்கேன் எடுக்கும்போது அவரது 5 பவுன் தங்கச் செயினை தவறவிட்டுள்ளார். தவறவிட்டது தெரிந்து செயினை தேடிப்பார்த்தபோது கிடைக்கவில்லை.இதுகுறித்து சம்பத்குமார் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் அரசு மருத்துவமனை சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்ததில் ஒரு நபர் செயினை எடுத்துச் செல்வது தெரியவந்தது.

அதை வைத்து எடுத்துச் சென்ற நபர் யார் என சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி கீழ தட்டப்பாறை ஜோதி நகரைச் சேர்ந்த ஊர்க்காவலன் (45) என்பவர் டிசம்பர் 30 ம் தேதி அன்று அவரது மகனுக்கு உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க வந்ததும், தவறவிட்ட தங்க தாலி செயினை எடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து மேற்படி தங்கச் செயினை பத்திரமாக போலீசார் மீட்டனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.இந்நிலையில் இன்று தங்கசெயினை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் தென்பாகம் காவல் நிலையத்தில் வைத்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். மேலும் சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து, துரிதமாக செயல்பட்டு தாலிச்செயினை மீட்ட தென்பாகம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட எஸ்பி.,ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Tags:    

Similar News