தேனியில் டிப்பர் லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார்
தேனியில் டிப்பர் லாரி மோதி டூ வீலரில் வந்த வாலிபர் பலியானார்.
தேனி அரண்மனைப்புதுார் ஐஸ்வர்யாநகர் வைகை தெருவை சேர்ந்தவர் ராகவா ஆதித்யன், 21. இவர் டூ வீலரில் தேனி வந்து கொண்டிருந்தார். ஆண்டிபட்டி நோக்கி சென்ற டிப்பர் லாரி மதுரை ரோடு பங்களாமேட்டில் இவர் மீது மோதியது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த ராகவா ஆதித்யன் உயிரிழந்தார். தேனி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.