பாகிஸ்தான் மீது மற்றொரு சர்ஜிகள் ஸ்ட்ரைக் !
Pakistan Surgical strike பாகிஸ்தானுக்குள் சென்று கொண்டிருந்தா ராவி நதிநீர் காஷ்மீருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.;
Pakistan Surgical strike
ஜம்மு & காஷ்மீரிலிருந்து பாக்கிஸ்தானுக்கு வழங்கிக் கொண்டிருந்த ராவி நதி நீர் நிறுத்தப்பட்டு ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இன்டஸ் நதி நீர் உடன்படிக்கையை 75 ஆண்டுகள் காலதாமதமாக பாரத அரசு தற்போது தான் நிறைவேற்றியுள்ளது. இதனால் ஜம்மு & காஷ்மீரில் உள்ள 32,000 ஹெக்டேர் நிலம் பாசன வசதியைப் பெற்றுள்ளது.
இன்டஸ் நதி நீர் உடன்படிக்கையின்படி ராவி நதியின் நீரை பாரதம் அதிக அளவு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் காங்கிரஸ் அரசு இதை நிறைவேற்றாமல் பழைய லக்கிம்பூர் அணையிலிருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீரைத் திறந்து விட்டுக் கொண்டு இருந்தது.
Pakistan Surgical strike
பாகிஸ்தானில் பாயும் ராவி நீர் (கோப்பு படம்)
தற்போது ராவி நதியின் அதிகமான நீர் மதோபூர் கால்வாயின் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளதால் பஞ்சாப், ஜம்மு & காஷ்மீர் மாநில விவசாயிகள் பெரும் பலனடைவர்.
நமக்குரிய ராவி நதி நீர் உரிமையை பாகிஸ்தானுக்கு பல வருடங்களாக தாரை வார்த்துக் கொண்டிருந்த ஒரு தேச விரோத செயல் முடிவிற்கு வந்தது.
மோடி பிரதமரான பிறகுதான் ஷாபூர் கண்டி கால்வாய்த் திட்டம் தூசி தட்டி எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 1,150 கன அடி ராவி நதி நீர் ஆண்டுதோறும் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தது தற்போது முடிவுக்கு வந்துள்ளது.