தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்

தஞ்சை மாநகராட்சியில் இன்று 05 மையங்களில் 1,400 தடுப்பூசிகள் போடப்படுகிறது என மாநகராட்சி அறிவிப்பு.

Update: 2021-09-02 01:30 GMT

பைல் படம்.

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு மையங்களில் தடுப்பூசியின் கையிருப்பை பொருத்து பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இன்று 05 மையங்களில் 1,400 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும், தடுப்பூசியை கையிருப்பு குறைந்த அளவே இருப்பதால் முதலில் வரும் பொது மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் 100 நபர்களுக்குக்கும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளியில் 100 நபர்களுக்கும், அரசர் மேல்நிலைப் பள்ளியில் 250 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும், குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரியில் 750 மாணவிகளுக்கும் என மொத்தம் 4 மையங்களில் 1,200 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், கரந்த் மாநகராட்சி பள்ளியில் 200 நபர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News