தஞ்சை மாவட்டத்தில் நாளை ரேஷன் கடை குறை கேட்புக்கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் நாளை முகாம் நடத்திடதிட்டமிடப்பட்டுள்ளது

Update: 2022-05-13 09:00 GMT

தஞ்சை மாவட்டத்தில் நாளை(மே14) ரேஷன் கடை குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.

பொதுவிநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அதனைக் களைவதற்கும்,மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும், ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்டம் தொடர்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்திட சென்னை. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2022மே மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், எதிர்வரும் 14.05.2022அன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் நடத்திட திட்டமிடப் பட்டுள்ளது. எனவே, குறைபாடுகள் ஏதுமிருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்துப் பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்

Tags:    

Similar News