சிறையிலிருந்து சுதாகரன் விடுதலை
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து சுதாகரன் இன்று விடுதலையானார்
சொத்துக்குவிப்பு வழக்கில், 2017 பிப்ரவரி 15 அன்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிடையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், சசிகலா, இளவரசி ஆகியோர் 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியதால், தண்டனைக் காலம் முடிவடைந்து கடந்த ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.
சுதாகரன் அபராதத் தொகையான 10 கோடி ரூபாய் செலுத்தாததால் அவருக்கு தண்டனைக் காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. தற்போது அவரது தண்டனைக் காலம் முடிவடைந்ததால், இன்று அவர் பெங்களூரு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.