சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது

Tirupur News - வெள்ளகோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த 8 பேர் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-05 12:53 GMT

Tirupur News- குண்டர் சட்டத்தில் 8 பேர் கைது (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- வெள்ளக்கோவிலில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 8 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா்

வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயில் தோ்த் திருவிழா கலை நிகழ்ச்சி கடந்த மாா்ச் 9 -ஆம் தேதி இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் காண மூலனூரைச் சோ்ந்த ஒரு பெண்ணும், அவரது 17 வயது மகளும் வந்துள்ளனா். அப்போது, கூட்டத்தில் இருந்த சிறுமியைக் காணவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், அதிகாலை 4 மணியளவில் சிறுமி வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது, அவரது தாயாா் கேட்டபோது, இருசக்கர வாகனம், காரில் வந்த 8 போ் பாலியல் தொல்லையளித்துவிட்டு, வீட்டின் அருகே இறக்கிவிட்டு சென்றுவிட்டனா் எனக் கூறியுள்ளாா்.

இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்ததாக வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையம் சாலை ராஜீவ் நகரைச் சோ்ந்த மணிகண்டன் (29), காமராஜபுரம் விநாயகா் கோயில் பகுதியைச் சோ்ந்த பிரபாகா் (32), சீரங்கராயகவுண்டன்வலசு பாரதி நகரைச் சோ்ந்த தமிழ்செல்வன் (எ) சதீஷ் (28), சிவநாதபுரத்தைச் சோ்ந்த மோகன்குமாா் (32), நந்தகுமாா் (30), நவீன்குமாா் (26), மூலனூரைச் சோ்ந்த தினேஷ் (27), தொட்டம்பாளையத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணி (30) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், 8 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, 8 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இந்ந உத்தரவுக்கான நகலை சிறையில் உள்ள 8 பேரிடமும் போலீஸாா் அளித்தனா்.


திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

திருட்டு வழக்குகளில் தொடா்புடைய நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நேற்று கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் அருகேயுள்ள கொசவம்பாளையத்தைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து. இவா் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் கடந்த மாதம் திருடிச் சென்றனா். இதேபோல, தாயம்பாளையம் பகுதியில் வடிவேலன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடா்பாக அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், திருட்டில் ஈடுபட்டது தருமபுரி மாவட்டம், முள்ளுவாடி பகுதியைச் சோ்ந்த மணிமாது (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், மணிமாதுவை குண்டா் சட்டத்தில் கைது செய்த மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பரிந்துரை செய்தாா். இதையடுத்து, மணிமாதுவை குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவுக்கான நகலை சிறையில் உள்ள மணிமாதுவிடம் போலீஸாா் வழங்கினா்.

Tags:    

Similar News