சேலம் அணைமேடு , முள்ளுவாடி ரயில்வே உயர்மட்ட மேம்பால பணிகளை விரைவில் முடிக்க கோரிக்கை

overfly bridge work delay,public demand action சேலம் மாநகரின் முக்கிய பகுதிகளான முள்ளுவாடி கேட், அணைமேடு பகுதியில் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவது தாமதமாகிறது. இதனால் தினந்தோறும் போக்குவரத்து நெருக்கடியே நிலவிவருகிறது. நடவடிக்கை தேவை.

Update: 2023-03-26 13:38 GMT

முள்ளுவாடி கேட் பகுதியில்  ஒரே கேட்வழியாகவே இருபுற வாகனங்கள்  செல்லும் நிலை. ரயில்வே கேட் போடும்போது  இவ்வளவுதான் போக்குவரத்து நெருக்கடி என்று இல்லை.... நடவடிக்கை தேவை....

overfly bridge work delay,public demand action


சேலம் அணைமேடு ரயில்வே  கேட் பகுதியில்  காத்திருக்கும்  டூவீலர் வாகனங்கள் ....வெட்ட வெயிலில்....

overfly bridge work delay,public demand action

சேலம் மாநகரின் மையப்பகுதியான முள்ளுவாடிகேட், அணைமேடு ரயில்வே கேட் ஆகிய பகுதிகளில் நாள்தோறும் ரயில்வரும் நேரத்தில் ஏராளமான வாகனங்கள் காத்துக்கிடக்கும் நிலையே தொடர்கிறது. இதனால் இந்த இருபகுதிகளிலும் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப்பணிகளை விரைவுபடுத்தவேண்டும் என பாதிப்படைந்து வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் ஜங்ஷனிலிருந்து விருத்தாச்சலம்செல்லும் ரயில் சேலம் மாநகரின் டவுன் ரயில்வே ஸ்டேஷன் வந்துதான் செல்லும். அதேபோல் இரண்டு பாசஞ்சர் ரயில்களும் இவ்வழியே தான் செல்கின்றன. இந்த ரயில்கள் வரும் நேரத்தில் முள்ளுவாடிகேட், மற்றும் அணைமேடு, பொன்னம்மாபேட்டை, தில்லைநகர் பகுதியிலுள்ள ரயில்வே கேட்கள் அனைத்தும் மூடப்படுகின்றன.

overfly bridge work delay,public demand action


சேலம் அணைமேடு ரயில்வே கேட் பகுதியில் இருபஸ்கள்  சேர்ந்தாற்போல் நிறுத்தியதால் பல மணி நேரம் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு ...வெயிலில் காத்திருக்கும் டூவீலர் பயணிகள்....போலீஸ் இல்லாததால் இந்த நெருக்கடி    நிலை

overfly bridge work delay,public demand action

முள்ளுவாடி கேட், பகுதி முன்பு இருபுறம் சென்று வந்த நிலையில் ஒரு பகுதியில் உயர்மட்டமேம்பாலம் அமைக்கும் பணி நடப்பதால் ஒரே கேட்டில் இருபுறமும் வாகனங்கள் செல்வதால் நாள்தோறும் அங்கு போக்குவரத்து நெருக்கடி என்பது நிரந்தரமாக ஏற்பட்டு வருகிறது. அதேபோல் அரூர், பேளூர், ஆத்துார்,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், பாண்டிச்சேரி, திருப்பதி, திருப்பத்துார் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அணைமேடு ரயில்வே கேட் வழியாகத்தான் புதிய பஸ்ஸ்டாண்டிற்கு செல்லவேண்டும் .அந்தந்த ஊர்களுக்கு செல்லவும் இந்த வழிப்பாதைதான். மேலும் காலை மாலை என இரு வேளைகளிலும் தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார்கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், பள்ளி மாணவ, மாணவிகள், அவர்கள் செல்லும் ஆட்டோக்கள் என எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் ரயில்வே கேட் பகுதியாக அணைமேடு ரயில்வே கேட் இருந்துவருகிறது.

overfly bridge work delay,public demand action


சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் பாதி வரை கட்டப்பட்டுள்ளதைக் காட்டும் படம்

overfly bridge work delay,public demand action

காலை, மாலை போக்குவரத்து நெருக்கடி

அணைமேடு ரயில்வே கேட் பகுதி வழியே எந்த ரயில்கள் சென்றாலும் கேட் போடப்படுவதால் இ ப்பகுதியானது காலை மாலை என இல்லாமல் கூட்ஸ் சென்றாலும் போக்குவரத்து ஸ்தம்பித்துவருகிறது. புதுபஸ்ஸ்டாண்ட் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்க அங்கு நாலா புறமும் கடந்த ஆட்சியில் பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால் கடந்த பல வருஷங்களாக பொதுமக்கள் மாணவர்கள் ஆபீசுக்கு செல்வோர் என ஏராளமானோர் பாதிக்கப்படும் அணைமேடு ,முள்ளுவாடி ரயில்வே கேட் உயர்மட்டமேம்பால பணிகள் நடந்து வருகிறது. ஆனால் வேகம் இல்லை. இதனால் இப்பகுதியில் நிரந்தரமான போக்குவரத்து நெருக்கடி எப்போதும் நிலவி வருகிறது.

overfly bridge work delay,public demand action


சேலம் முள்ளுவாடி கேட்பகுதியில்  பாலம் கட்டுமான  பணிக்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கியுள்ள தண்ணீர் 

 overfly bridge work delay,public demand action

கொளுத்தும் வெயிலில் பல மணி நேரம் காத்திருப்பு

தற்போது வெயில் சுள்ளென்று அடிக்க துவங்கியுள்ளது .அதுவும் காலை நேரத்திலேயே வெயிலின் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.பெரும்பாலும் ரயில் வரும் நேரமானது உச்சி வெயில் 12 மணிக்குதான் என்பதால் அந்த நேரத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டுவிடுவதால் இருசக்கர வாகனஓட்டிகள் அனைவருமே கடும்வெயிலில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் காத்து கிடப்பதால் அவர்கள் உரிய நேரத்தில் தங்களுடைய பள்ளிக்கு செல்லமுடியாமல் பாதிப்படைந்து வருகின்றனர்.

overfly bridge work delay,public demand action


சேலம்  செர்ரிரோடு பகுதியில்  பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால் போடப்பட்டுள்ள குண்டும் குழியுமான சர்வீஸ் ரோடு..

overfly bridge work delay,public demand action

பெரும் பாதிப்படையும் முள்ளுவாடி கேட்

சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது முள்ளுவாடி கேட். இந்த கேட் பகுதியில் இருபுற வழிகள் முன்பு இருந்தது. தற்போது ஒரு வழி மூடப்பட்டு பாலம் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஒரே ஒரு கேட் வழியாகவே இருபுற போக்குவரத்தானது கடந்த 2 வருடத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இதனால் பெரும் போக்குவரத்து பாதிப்பு நடப்பது தினந்தோறும் தொடர்கதையாகி வருகிறது. இவ்வழியே தினந்தோறும் ஏராளமான டவுன்பஸ்கள், இருசக்கர வாகனங்கள் என எப்போதும் காலை துவங்கி 24 மணிநேரமும் போக்குவரத்து தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும். ஆனால் கடந்த 2 வருடங்களுக்கு மேலாகியும் பாலம் கட்டுமானப்பணிகள் விட்டு விட்டு நடப்பதால் மிகவும் மெதுவாகவே பணிகள் நடந்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

overfly bridge work delay,public demand action


சேலம் தொங்கும் பூங்கா எதிரே பாலம் கட்டுமானப்பணி நடந்து முடிந்தாலும் இன்னும் முழுமை அடையவில்லை 

overfly bridge work delay,public demand action

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாலம் கட்டுமானப்பணிகள் நடந்து வந்தாலும் அதனைத்துரிதப்படுத்தவேண்டும் எனபொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பாலப்பணியால் பாதிக்கப்படும் கட்டிடதாரர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் சிறிது காலம் இப்பணிகள் பாதிப்படைந்தது. தற்போது அதற்கும் ஒப்புதல் பெற்ற நிலையில் ஏன் தாமதமாக பணிகள் நடக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.

தினந்தோறும் அணைமேடு ரயில்வே கேட் பகுதியில் நிற்கும் வாகனங்கள் கேட்டைத் திறந்த பிறகு போர்க்களத்தில் இருபுறமும் எதிரெதிராக நின்ற போர்வீரர்கள் தாக்கிக் கொள்வது போல் எதிரெதிரே சென்று நிலைகுலைகின்றனர். இதே நிலைதான் முள்ளுவாடி கேட் பகுதியில் தினற்தோறும் நடக்கிறது. இது தொடர்கதையாகவே உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பாலப்பணிகளை விரைவு படுத்தி தினமும் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு விரைவில் விடை தேடித்தரவேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏகோபித்த கோரிக்கையாக உள்ளது. 

Tags:    

Similar News