ஜல்லிக்கட்டு: வாடிவாசல் அமைக்க கால்கோள் விழா

புத்திர கவுண்டம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை ஒட்டி வாடிவாசல் அமைக்க கால்கோள் விழா நடைபெற்றது.

Update: 2021-02-11 03:00 GMT

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி மதுரைக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் அதிக அளவிலான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையத்தில் வருகின்ற 18 ஆம் தேதியன்று மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றன. அதற்காக வாடிவாசல் அமைக்கும் பணிக்கு கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன், ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னத்தம்பி மற்றும் விழாக் குழுவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News