இலங்கை அரசைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்..

கடலில் பேருந்துகளை போட்டு கடல் வளத்தை அளிக்கும் இலங்கை அரசுக்கு இராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கண்டனம்.

Update: 2021-06-15 03:00 GMT
கடலில் பேருந்துகளை போட்டு கடல் வளத்தை அளிக்கும் இலங்கை அரசுக்கு இராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கண்டனம். 16ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் பாரம்பரிய மீன்பிடி கடற்பரப்பில் பயன்பாட்டில் இல்லாத பேருந்துகளை போட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக மேலும் 15 நாட்கள் மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை மராமத்தது பணி செய்து விட்டு, வரும் 30 ந் தேதிக்கு மேல் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாம் என முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து இன்று இராமேஸ்வரம் மீன்பிடி டோக்கன் அலுவலக வளாகத்தில் விசைப்படகு மீனவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். மீனவர்கள் நடத்திய கூட்டத்தில்: தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலை அளிக்கும் நோக்கத்தோடு, சர்வதேச கடல் எல்லையில் இருந்து இந்திய-இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் இடங்களான கச்சத்தீவு, நெடுந்தீவு, நயினாதீவு பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத பேருந்துகளை கடல் பரப்பில் இலங்கை அரசு இறக்கி வருகின்றது.

பேருந்துகளின் கூடுகளை கடலில் இருக்கும் போது கடல் மாசு படுவதுடன் தமிழக மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்தாலும் அவர்கள் விரிக்கும்; மீன்பிடி வலைகள் காற்றின் வேகம் காரணமாகவும், கடல் நீரோட்டம்; காரணமாக இலங்கை கடற்பகுதிக்குல் செல்லகூடும். இதனால் படகுகள் மற்றும் வலைகளை சேதமடைந்து படகு ஒன்று சுமார் ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படும். உடனடியாக இலங்கை மீன்வளத்துறை இந்த திட்டத்தை கைவிட வேண்டும். அதேபோல் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் டீசல் விலையால் மீனவர்கள் தங்களது படகுகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் கலால், சாலை வரிகளை நீக்கி மீனவர்களுக்கு உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ம் இராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News