தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து இராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு.

Update: 2022-04-02 06:19 GMT

இராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் அருகே கானிக்கூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மனைவி பேச்சிமுத்து. இவர்களது மகன் குருசாமி. மகன் குருசாமி தனது தாயார் முத்துப்பேச்சியிடம் பணம் கேட்டபோது அவர் தராததால் அரிவாளை எடுத்து தாயாரை வெட்டிதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து போனார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்த நிலையில், இன்று இராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இறுதி விசாரணை முடிக்கப்பட்டு கொலை குற்றவாளியாக குருசாமி அறிவிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து, அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News