பாம்பனில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்: மீனவ குடும்பங்கள் அவதி

பாம்பனில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர். வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மீனவ குடும்பங்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

Update: 2021-11-28 15:08 GMT

தோப்புக்காடு பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்.

பாம்பன் அருகே உள்ள சின்ன பாலம், தோப்புக்காடு பகுதியில் பெய்த வரும் கனமழையின் காரணமாக 50க்கும் மேற்பட்ட மீனவர் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி குளம் போல காட்சி அளித்து வருகின்றது.
இதனால் தங்களுடைய அத்தியாவசிய தேவையான பொருட்கள் கூட வாங்க வெளியே வரமுடியாமல் மீனவ குடும்பங்கள் பரிதவித்து வருகின்றனர்.
மழைநீரை வெளியேற்றுவதற்காக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News