பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் 20 பெட்டிகளுடன் சோதனை ஓட்டம்

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் 20 பெட்டிகள் கொண்ட ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Update: 2021-07-03 17:16 GMT

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் 20 பெட்டிகள் கொண்ட ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

கடந்த 28 -ஆம் தேதி பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் சென்சார் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ராமேஸ்வரத்திற்கு வரும் ரயில்கள் அனைத்தும் மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டு, அங்கிருந்து திருச்சி கோவை, சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கும் செல்கின்றது.

இந்நிலையில் தூக்கு பாலத்தில் ஏற்பட்டுள்ள சென்சார் தொழில்நுட்பக் கோளாறு தொடர்பாக தொடர்ந்து பல அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். மேலும் ரயில்வே ஊழியர்களும், சென்னை ஐஐடி சேர்ந்த மாணவர்களும் தொடர்ந்து கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 20 பெட்டிகள் கொண்ட ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்திற்கு பின்பு ரயில் பாலத்தில் ஏற்பட்ட கோளாறுகள் முழுவதும் நிறைவடைந்ததா இல்லையா என்பது தெரியவரும். மேலும் கோளாறு முழுமையாக சரி செய்த பின்பு பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்கள் செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News