இராமநாதபுரத்தில் இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளை மாநில கவுன்சில் கூட்டம்
Indian Medical Association Tamil Nadu Branch State Council Meeting
இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளையின் 313வது மாநில கவுன்சில் கூட்டம் இராமநாதபுரத்தில் நடைபெற்றது.
இராமநாதபுரத்தில்19.06.2022 இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளையின் 313வது மாநில கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை கிளை சார்பாக தலைவர் டாக்டர் சுவாமிநாதன் செயலாளர் டாக்டர் முகம்மது சுல்தான் நிதி செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கவுன்சில் உறுப்பினர் டாக்டர் ராஜா கலந்து கொண்டார்கள்.கூட்டத்தில் மாநில தலைவர்டாக்டர் பழனிச்சாமி,செயலர்டாக்டர் தியாகராஜன் நிதி செயலாளர்டாக்டர் அழகாவெங்கடேசன் இராமநாதபுர இந்திய மருத்துவ சங்க தலைவர்டாக்டர் ரவிந்த்ராஜ், செயலர் டாக்டர் பரணிக்குமார், நிதி செயலாளர் டாக்டர் ரசிகலா மற்றும் பலர் கலந்துகொண்ட கூட்டத்தில் தேசிய மருத்துவ ஆணையம் புதிதாக கொண்டு வந்த விதிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
இதில் மருத்துவர் களுக்கு எதிராக உள்ள சட்ட திட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அனைத்து மருத்துவர்களும் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் இதுபற்றி தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மின்னஞ்சல் அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை பணியாளர்களுக்கு ஊதிய விகிதத்தை தமிழக அரசு விரைவில் மாற்றி அமைத்து வழங்கிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.