பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது

Update: 2021-12-26 06:00 GMT

புதுக்கோட்டை அருகே 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை அருகே முள்ளூர் பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞரான ஈஸ்வரன் என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் ஈஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.  இதனை தடுக்க போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News