கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு டிச.4 -ல் எழுத்து தேர்வு

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலகில் காலியாகயுள்ள 70 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு நடக்கிறது

Update: 2022-12-02 09:30 GMT

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு04.12.2022 அன்று எழுத்து தேர்வு நடத்தப்படவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலகில் காலியாகயுள்ள 70 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்கள் கூராய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதார்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதார்களுக்கும் 04.12.2022 (ஞாயிறு) அன்று எழுத்து தேர்வு கீழ்கண்ட மையங்களில் நடத்தப்படவுள்ளது.

கறம்பக்குடி தாலுகாவில் அரசு கலைக்கல்லூரி, மருதன்கோன்விடுதி, கறம்பக்குடி தேர்வு மையமும், திருமயம் தாலுகாவில் ஏ.ளு.மு.கல்வியியல் கல்லூரி, பிலிவலம், திருமயம்தேர்வு மையமும், கந்தவர்வகோட்டை தாலுகாவில் வித்யவிகாஸ் மேல்நிலைப்பள்ளி, பழைய கந்தர்வகோட்டை  தேர்வு மையமும், புதுக்கோட்டை தாலுகாவில் ராணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதிய பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை  தேர்வு மையமும், ஆலங்குடி தாலுகாவில் ஆ.N.ளு.மு பொறியியல் கல்லூரி தெட்சிணாபுரம், வல்லத்திராக்கோட்டை, ஆலங்குடி தேர்வு மையமும், இலுப்பூர் தாலுகாவில் மதர்தெரசா வேளாண்மை கல்லூரி, மேட்டுச்சாலை, இலுப்பூர் தேர்வு மையம்.

பொன்னமராவதி தாலுகாவில் அமலா அன்னை, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுப்பட்டி, சந்தை வீதி, பொன்னமராவதி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன் புதுப்பட்டி, பொன்னமராவதி தேர்வு மையமும், குளத்தூர் தாலுகாவில் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி, சீனிவாச நகர், களமாவூர், கீரனூர் தேர்வு மையமும், விராலிமலை தாலுகாவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செக்போஸ்ட் நிறுத்தம், விராலிமலை தேர்வு மையம்.

ஆவுடையார்கோவில் தாலுகாவில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆவுடையார்கோவில் தேர்வு மையமும், அறந்தாங்கி தாலுகாவில் லாரல் மேல்நிலைப்பள்ளி, குரும்பக்காடு, அறந்தாங்கி  மற்றும் ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி  மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி தேர்வு மையமும், மணமேல்குடி தாலுகாவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மணமேல்குடிதேர்வு மையமும், ஆகிய மையங்களில் எழுத்து தேர்வு நடத்தப்படவுள்ளது.

இணைய வழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதார்களுக்கு எழுத்து தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூலம் அனுமதிச் சீட்டினை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கிராம உதவியாளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியான https//agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174  என்ற இணையதளத்தினுள் சென்று பதிவு எண்ணையும் கைபேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதார்களுக்கு தபால் மூலம் பதிவஞ்சலில் தேர்வு அனுமதிச்சீட்டு அனுப்பி வைக்கப்படும். மேலும், கூராய்வு செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

அனைத்து விண்ணப்பதாரர்களால் தேர்வு நாளன்று கீழ்காணும் விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 09.30 மணிக்கு தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதார்கள் எவரும் தேர்வு அறைக்குள் காலை 9.50 மணிக்கு பின் அனுமதிக்கப்படமாட்டார்கள் மற்றும் காலை 10.50 மணிக்கு முன் தேர்வு மையத்தைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனுமதி சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

விண்ணப்பதாரர்கள் கருப்பு பால்பாய்ண்ட் பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். அனுமதி சீட்டு மற்றும் பால்பாய்ண்ட் பேனாவைத்தவிர தேர்வு அறைக்குள் வேறு எந்த பொருளையும் கொண்டு வரக்கூடாது. விண்ணப்பதாரர்கள் அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்த மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டு வரக்கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News