வாசிப்பை நேசிப்போம்: உறுதி ஏற்றுக் கொண்ட பள்ளி மாணவ மாணவிகள்

பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழகம் இணைந்து நடத்திய புத்தக கண்காட்சி நடைபெற்றது

Update: 2021-09-27 09:13 GMT

புதுக்கோட்டை குலபதி பாலையா மேல்நிலைப் பள்ளியில் நூலக தந்தை ரெங்கநாதன் 49வது    நினைவு தினத்தை முன்னிட்டு  பள்ளியில் புத்தக கண்காட்சி   நடைபெற்றது இதில் ஆர்வத்துடன்   கலந்து கொண்ட பள்ளி மாணவ  மாணவிகள்

புதுக்கோட்டை குலபதி பாலையா மேல்நிலைப் பள்ளியில் இன்று நூலக தந்தை ரெங்கநாதனின் 49-வது நினைவு தினத்தை முன்னிட்டு வாசிப்பை நேசிப்போம் உறுதி மொழியை பள்ளி மாணவ, மாணவிகள் ஏற்றுக்கொண்டனர்.

இதில், ஆசிரியர் மீனாள், பள்ளியின் தலைமையாசிரியர் ரமேஷ்பாபு, பள்ளியின் தாளாளர் சரவணன், வாசிப்பை நேசிப்போம் நிர்வாகி சாமிநாதன் ஆகியோர், மாணவ-மாணவிகளுக்கு வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில்  கருத்துரையாற்றினார். மேலும்,  வாசிப்பை நேசிப்போம், புத்தகங்கள் மற்றும் பல்வேறு நூல்களை தினம்தோறும் படிப்போம் என்று ஆசிரியர்கள் உறுதிமொழியை கூற மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

இதை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழகம் இணைந்து பள்ளி வளாகத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இதில், பள்ளி சார்ந்த பல்வேறு செய்திகள் மற்றும் பல்வேறு தலைவர்கள் பற்றிய குறிப்புகள் மற்றும்  பல்வேறு வகையான புத்தகங்கள்  காட்சிப்படுத்தப்படிருந்தன. பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டனர்.


 

Tags:    

Similar News