முன்னாள் எம்எல்ஏ கோரிக்கைய நிறைவேற்றி கொடுத்த திருச்சி எம்பி திருநாவுக்கரசர்

திருச்சி எம்பி உறுப்பினர் நிதியில் இருந்து காந்திநகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டது

Update: 2021-11-16 08:45 GMT

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மேம்பாட்டு நிதியிலிருந்து காந்தி நகர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாற்றம் வகுப்பறையை துவக்கி வைத்த முன்னாள் எம்எல்ஏ கவிச்சுடர் கவிதை பித்தன்

 முன்னாள்  எம்எல்ஏ விடுத்த கோரிக்கையை திருச்சி எம்பி திருநாவுக்கரசர் உடனடியாக நிறைவேற்றி கொடுத்தார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட புதுக்கோட்டை காந்திநகர் பகுதியில்,  திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்பொழுது திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரா.சு. கவிதைபித்தன்,  காந்தி நகர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் கல்வி பயில்வதற்கு வசதியாக ஸ்மார்ட் கிளாஸ் அமைத்துக் கொடுக்க வேண்டுமென திருச்சி எம் பி திருநாவுக்கரசரிடம்   கோரிக்கை வைத்தார் .

இதனை அடுத்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து காந்திநகர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் புதிதாக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அமைக்க நிதி  ஒதுக்கினார். கட்டிமுடிக்கப்பட்ட புதிய வகுப்பறையை, முன்னாள் எம்எல்ஏ கவிதைபித்தன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் திமுக சிறுபான்மை நலப் பிரிவு அமைப்பாளர் எம். லியாகத் அலி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சந்தோஷ், மா.மணிவேலன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் மரியஎட்வின், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி தர்மராஜ், பள்ளித் தலைமையாசிரியை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News