மரம் நண்பர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்
மரம் நண்பர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், மரக்கன்றுகள், முட்டை வழங்கப்பட்டது.
மறைந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சேவையை நினைவு கூறும் வகையிலும், தமிழகத்தில் புதிதாக அமைய இருக்கும் அரசின் நல்லாட்சி வேண்டியும் மரம் நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், கபசுரக் குடிநீர் மற்றும் முட்டை வழங்கும் நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மரம் நண்பர்கள் பழனியப்பா மெஸ் கண்ணன் சமூக ஆர்வலர் கார்த்திக் மெஸ் மூர்த்தி உள்ளிட்ட மரம் நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் நோய், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முட்டை மற்றும் இயற்கையான சுவாசக்காற்றை பெற மரக்கன்றுகளையும் பொது மக்களுக்கு வழங்கினார்.