புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் நுழைந்த பெண்ணால் பரபரப்பு

ஏமாற்றி சென்ற கணவன் மீது நடவடிக்கை எடுக்காத ஆலங்குடி போலீசாரை கண்டித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு.

Update: 2021-08-10 05:30 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் நுழைந்த பெண்ணிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்யும் காவல் துறையினர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள தவளைபள்ளம் பகுதியை சேர்ந்த ஜெனிபர் பிரியங்கா என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.  இதனையடுத்து ஆலங்குடி காவல்நிலையத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தற்போது ஜெனிபர் பிரியங்கா கர்ப்பமாக இருக்கும் சூழ்நிலையில் ஆல்பர்ட் அவரை விட்டு சென்றுவிட்டார்.

இது தொடர்பாகஆலங்குடி காவல் நிலையத்தில் ஜெனிபர் புகார் தெரிவித்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் ஆல்பர்ட்யின் உறவினர்களும் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், என்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிய ஆல்பர்ட் குடும்பத்தின் மீதும், அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் ஜெனிபர் பிரியங்கா, அவரது ஆகியோர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத காவல்துறையினர் உடனடியாக அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் கேனை  பறிமுதல் செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

Similar News