சமூக இடைவெளியோடு நின்று நிவாரண தொகை பெற்று சென்ற பொதும்க்கள்

புதுக்கோட்டையில் கொரோனா நிவாரணத்தை பொதுமக்கள் சமூக இடைவெளியோடு நின்று வாங்கி சென்றனர்.

Update: 2021-05-15 11:30 GMT

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் கொரோன நிவாரண தொகை 2000 ரூபாய் முதல் தவணை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்த நிலையில் இன்று புதுக்கோட்டை நகர பகுதிகளில் பல்வேறு நியாயவிலை கடைகளில் கொரோன நிவாரணத்தொகை 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது

நியாயவிலைக் கடைகளின் முன்பு பொது மக்கள் கூட்டமாக கூட கூடாது சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிப்பதற்கு அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில்

கீழ மூன்றாம் வீதியில் உள்ள நியாய விலை கடையில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வரிசைகட்டி நின்று 2000 ரூபாய் நிவாரண தொகையை பெற்று சென்றனர்..

Tags:    

Similar News