புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2022-03-15 06:29 GMT

கர்நாடக அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுக்கோட்டை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் காவிரியின் குறுக்கே அணைக்கட்ட துடிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும் அதற்குத் துணைபோகும் மத்திய அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ரியாஸ் தலைமையில் 50 மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News