புதுக்கோட்டையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-29 13:30 GMT

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகே தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகே புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் சிவராஜ் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் தென்னரசு, பொருளாளர் சுரேஷ், அமைப்புச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்களுக்கு என்று தனியாக பாதுகாப்புச் சட்டம் ஏற்படுத்த வேண்டும்,கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News