திரிணாமுல் கட்சியை கண்டித்து புதுக்கோட்டையில் பாஜக ஆர்ப்பாட்டம்
மேற்கு வங்க திரிணாமுல் கட்சியை கண்டித்து புதுக்கோட்டையில் தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை கொலை செய்து, தொண்டர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய அராஜக போக்கை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் திலகர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மகளிர் அணியினர் கலந்துகொண்டனர். கொலைக்குற்றவாளிகள் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மம்தா பானர்ஜி பதவி ஏற்க கூடாது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்