உடற்பயிற்சி கூடத்தில் விளையாட்டுத்துறைஅமைச்சர் ஆய்வு
ஆலங்குடி சாலையில் தனியார் உடற்பயிற்சி கூடத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்
புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தனியார் உடற்பயிற்சி கூடத்தை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் உள்ள பல்வேறு உடற்பயிற்சி உபகரணங்களை உடற்பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளரிடம் கேட்டு அறிந்துகொண்டார்.ஒவ்வொன்றாக பார்வையிட்டு வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உடற்பயிற்சி செய்தார். அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த திமுக நகர கழக செயலாளர் நைனா முகமது, எதிர்க்கட்சிகளை சமாளிப்பதற்காக தற்போது அமைச்சர் உடற்பயிற்சி கடுமையாக செய்து வருவதாக கூறினார்.