பொதுமக்களிடம் அன்பாக நடக்க எஸ்பி., வேண்டுகோள்

Update: 2021-04-15 06:00 GMT

பொதுமக்களிடம் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என புதுக்கோட்டைமாவட்ட எஸ்பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மீண்டும் பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு தளர்த்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் அறிவித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் நடந்து வரும் சூழ்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் ஒரு வேண்டுகோளை வெளியிட்டுள்ளார்.

அதில் கொரோனா வைரஸ் தொற்று பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வாக எடுத்துக் கூறியும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களிடம் போலீசார் எடுத்துக் கூற வேண்டுமே தவிர அவர்களிடம் அடாவடியாக நடந்து கொள்ளக்கூடாது. தரக்குறைவான வார்த்தைகளில் பொதுமக்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் காவலர்கள் பேசக் கூடாது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News