புதுக்கோட்டை நகரில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நெகிழி பைகள் பறிமுதல்

புதுக்கோட்டை நகர பகுதியில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நெகிழி பைகளை அதிகாரிகள் பறிமுதல செய்தனர்.

Update: 2022-01-05 04:09 GMT

தமிழகம் முழுவதும் நெகிழிப் பைகளை தடை செய்வதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மஞ்சப்பை இயக்கம் என ஒரு திட்டத்தை துவக்கி வைத்து அனைவரும் மஞ்சப்பை மற்றும் துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தமிழ்நாடு முழுவதும் நெகிழிப்பை ஒழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகம் மருந்து கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் அதிரடி ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை மறைத்து வைத்திருந்த கடைகளிலிருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு டன் நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து நெகிழிப் பைகளை கடைகளில் வைத்திருந்த கடைகளுக்கு மொத்தமாக 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News