பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-12 12:09 GMT

புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ  கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 பெட்ரோல் டீசல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு தொடர்ந்து வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை உயர்த்திதையடுத்து அத்தியாவசிய பொருட்களான காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றனர். தொடர்ந்து பெட்ரோல் டீசல் எரிவாயு விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு புதுக்கோட்டை புதுக்கோட்டை மேற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெட்ரோல் டீசல் எரிவாயு மற்றும் தமிழக அரசு 150 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது கண்டித்தும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News