30 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த மயில் உயிருடன் மீட்பு

புதுக்கோட்டையில் 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

Update: 2021-07-16 16:15 GMT

புதுக்கோட்டை வடக்கு மூலம் வீதியில் பழங்காலத்தில் இருக்கும் முப்பதடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த மயிலாள், 30 அடி ஆழ கிணற்றிலிருந்து மேலே பறக்க முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், ஒரு தீயணைப்பு வீரரை கயிற்றால் கட்டி 30 அடி ஆழக் கிணற்றுக்குள் இறக்கி பொதுமக்கள் உதவியுடன் மயிலை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட  மயிலை தீயணைப்பு துறையினர், வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


Tags:    

Similar News