புதுக்கோட்டையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் நண்பருடன் கைது

புதுக்கோட்டையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-20 06:30 GMT

கைது செய்யப்பட்ட  சுரேஷ்குமார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். (25),புதுக்கோட்டை போஸ் நகர்ப்பகுதியில் அவரது உறவினர் வீட்டிற்கு சுரேஷ்குமார் அடிக்கடி வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது உறவினர் வீட்டு அருகில் வசித்து வரும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் சுரேஷ் குமாருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.இருவரும் பல்வேறு தருணங்களில் தனிமையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இருவரும் தனிமையில் இருக்கும்போது சுரேஷ்குமாரின் ஆலோசனையின் பேரில் அவரது பதினேழு வயது நண்பர் செல்போனில் படம் எடுத்துள்ளார்.

சுரேஷ்குமார் அதனை வைத்து அடிக்கடி மாணவியிடம் பாலியல் ரீதியான தொந்தரவு  கொடுத்துள்ளார். இந்த விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததை தொடர்ந்து அவர்கள் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமார் மற்றும்  அவரது நண்பர் சுதர்சன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  17 வயது நபர் சிறுவர் சீர்திருத்த பள்ளி சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News