ஜூன் 30 ல் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது

Pudukottai district farmers grievance day meeting

Update: 2022-06-29 11:30 GMT

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்( 30.06.2022 ) வியாழக்கிழமை  நடைபெறவுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜுன் 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.06.2022-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தகவல்  தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம்  தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்கூட்டத்திற்கு கலந்து கொள்ளும்  விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு கூட்டத்தில் கலந்துக் கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News