புதுக்கோட்டையில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணம், வழங்கிய அமைச்சர்கள்

புதுக்கோட்டையில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணங்களை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கினர்.

Update: 2021-06-15 16:36 GMT

புதுக்கோட்டையில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக 2000 ரூபாயை திருநங்கைகளுக்கும் வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்திருந்தார்

இதையடுத்து இன்று புதுக்கோட்டையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் புதுக்கோட்டையில் உள்ள திருநங்கைகளுக்கு நிவாரண நிதியாக 2000 ரூபாயை வழங்கினர் 

Tags:    

Similar News