புதுக்கோட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கொரோனா கட்டுப்பாடு உதவி மையம் திறப்பு
புதுக்கோட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கொரோனா கட்டுப்பாடு உதவி மையத்தை அமைச்சர் ரகுபதி திறந்துவைத்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட கொரானா கட்டுப்பாட்டு உதவி மையத்தை அமைச்சர் ரகுபதி திறந்து வைததார்.
அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை எம்எல்ஏ முத்து ராஜா ஆகியோர் தவ்ஹீத் ஜமாத் சார்பில் இரண்டு இலவச ஆம்புலன்ஸ் சேவை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் முபாரக்அலி, நகர கழக செயலாளர் நைனா முகமது, நெசவாளர் அணி அமைப்பாளர் பாலு உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.