புதுக்கோட்டை சித்தா கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவ மையத்தில் யோகாசனம் பயிற்சி

புதுகோட்டை மாவட்ட சித்தா கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவ மையத்தில் யோகாசனம் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

Update: 2021-05-28 23:15 GMT

புதுக்கோட்டையில் சித்தா கொரோனா சிகி்ச்சை மய்யம் இயங்கிவரும் வளாகம்

தமிழக முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவ துறை அமைச்சர் ஆணைக்கிணங்கவும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் ஐஏஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்  உமாமகேஸ்வரி ஆலோசனையின்படி புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தில் கோவிட்-19 சித்தா மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது

இம்மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் குணங்களுக்கு சித்த மருந்துகளும் மேலும் புற. மருத்துவமாக ஆவி பிடித்தல் மூச்சுப்பயிற்சி லிங்கமுத்திரை பயிற்சி, சுயவர்ம பயிற்சி மூலம் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நோயாளிகள் மன அழுத்தம் இல்லாமல் பாரம்பரிய உணவு வகைகளுடன் சிகிச்சை பெற்று விரைவில் குணமடைகின்றனர். பணி மருத்துவர்களான சரவணன் ,வித்யா பத்மாவதி ,ஆகியோர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உம்மல் கதிஜா மற்றும் நோடல் அதிகாரி மாமுண்டி அவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்'

Tags:    

Similar News