ரோட்டரி சங்கங்கள் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் அமைச்சர் ரகுபதி 15 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கினார்.

Update: 2021-06-07 13:46 GMT

புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் இரண்டாவது தவணையாக 15 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை அமைச்சர் ரகுபதி, அரசு மருத்துவமனைக்கு வழங்கினார். அருகில் எம்எல்ஏ முத்துராஜா, ரோட்டரி சங்க நிர்வாகிகள்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரண்டாவது தவணையாக இன்று 15 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெ்றது.

ரோட்டரி மாவட்டம்  ஆளுநர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கலந்துகொண்டு 15 ஆக்சிசன் செறிவூட்டும் கருவிகளை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதியிடம் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள் ராஜ்மோகன், இந்திராணி நகரச் செயலாளர் க.நைனா முகம்மது, ரோட்டரி மாவட்ட செயலாளர்கள் கான் அப்துல் கபார் கான், அருணாச்சலம், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கர்ணன், பஷீர் முகமது, துணை ஆளுநர் ஹபிபுல்லா, ரோட்டரி மாவட்ட நிர்வாகிகள் மோகன்ராஜ், வில்சன் ஆனந்த், மற்றும் ரோட்டரி சங்கத் தலைவர்கள், செயலாளர்கள், முன்னாள் தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News