புதுக்கோட்டை மக்கள் குறைதீர் கூட்டம்: 274 மனுக்கள் பெறப்பட்டது

பட்டா மாறுதல்;, விலையில்லா வீட்டுமனைப் பட்டா, வங்கிக்கடன் உதவி, பசுமைவீடு, முதியோர் உதவித்தொகை கோரி மனு அளிக்கப்பட்டது

Update: 2021-10-18 08:15 GMT

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் மனுக்களை பெறும் மாவட்ட ஆட்சியர்  கவிதாராமு

புதுக்கோட்டைமக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம்ம 274 மனுக்கள் பெறப்பட்டது

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு,  தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பட்டா மாறுதல்;, விலையில்லா வீட்டுமனைப் பட்டா, வங்கிக்கடன் உதவி, பசுமைவீடு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 274 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  உத்தரவிட்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News