புதுக்கோட்டையில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி

அசோக் நகர் அருகில் உள்ள திருநகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்

Update: 2021-10-26 09:00 GMT

புதுக்கோட்டை அசோக் நகர் அருகில் உள்ள திருநகரில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 தினங்களாக இரவு நேரங்களில் 4 மணி முதல் 5 மணி நேரம் வரை தொடர் மழை பெய்து வருவதால், மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது குறிப்பாக புதுக்கோட்டை அசோக் நகர் அருகில் உள்ள திருநகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். உடனடியாக மழைநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே புகாமால் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதேபோன்று புதுக்கோட்டை பூ சந்தையில் மழை நீர் முழங்கால் அளவிற்கு சூழ்ந்துள்ளதால் வியாபாரிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

Tags:    

Similar News