புதுக்கோட்டை நகராட்சி சார்பில் சாலை ஓரங்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்

புதுக்கோட்டை நகராட்சி சார்பாக சாலை ஓரங்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

Update: 2021-05-28 08:00 GMT

புதுக்கோட்டை  நகராட்சி சாலை ஓரங்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்துள்ளது.

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோன கொரோனா விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது

தமிழக அரசு முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள் காவல்துறையினர் செவிலியர் ஊடகத்துறையினர் உள்ளிட்டோரை அறிவித்துள்ளது அதன்படி மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதாஸ்கோப் துப்புரவு பணியாளர்கள் பயன்படுத்தப்படும் துடைப்பம் காவல்துறையினர் அணியும் தொப்பி போன்ற பல்வேறு முன் களப்பணியாளர்கள் பயன்படுத்தப்படும் பொருள்களை வரைந்தும் கொரோனா வைரஸ் தொற்று உருவத்தை வரைந்து பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என நகராட்சி சார்பில் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்

Tags:    

Similar News