புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா முன்கள பணியாளர்களை ஊக்கப்படுத்தினார்.
தமிழகம் முழுவதும் இரண்டாவதாக அலையாக கொரேனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை முடியாத நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு பணிகள் மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்து வருவதால், இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேரில் சென்று மருத்துவரிடம் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார் மருத்துவர்களுக்கும் ஆலோசனைகளும் வழங்கினார் இந்த நிகழ்வில் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் உடனிருந்தனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறி, ஊரடங்கு காலத்திலும் களப்பணியாற்றுகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தினார்