தீ விபத்தில் பாதித்தோருக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

புதுக்கோட்டை தீ விபத்தில் பாதிப்படைந்தோருக்கு எம்எல்ஏ முத்துராஜா நிவாரண உதவிகளை வழங்கினார்.

Update: 2021-05-15 13:00 GMT

புதுக்கோட்டை ராஜா குளம் அருகே இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில்  கோழிக்கடை முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்து சாம்பலானது இதில் கோழிக்கடை மற்றும் கறிக்கடை நடத்துவதற்காக போடப்பட்டிருந்த மர டேபிள்கள்  கோழிகளை அடைத்து வைக்க பயன்படுத்தப்பட்ட கூண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து சாம்பலானது,

அதேபோல் கோழி கடை எதிரே இருந்த வீட்டின் கூரை கொட்டகையில் தீப்பிடித்து எரிந்ததில் அந்த வீட்டின் ஒரு பகுதி கூரைக் கொட்டகை எரிந்தது நாசமானது,  இதுகுறித்து கணேஷ் நகர் காவல்துறையினர் விசாரணை  செய்து வருகி்ன்றனர்.

இந்த தகவல் அறிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து  தீ விபத்தால்  பாதிப்படைந்தோரை நேரில் சந்துித்து ஆறுதல் கூறினார். நிவாரண தொகை வழங்கினார்..

Tags:    

Similar News