புதுக்கோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திடீர் மரணம் : அலுவலர்கள் அதிர்ச்சி

இவர் மாற்றுத்திறனாளி என்பதால் அலுவலக பணி முடிந்து ஊராட்சிஒன்றிய அலுவலகத்திலேயே தங்கி இருந்தார்

Update: 2022-01-06 06:45 GMT

புதுக்கோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திடீர் மரணமடைந்ததால் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக நாமக்கல் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் கடந்த எட்டு மாதங்களாக, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் மாற்றுத்திறனாளி என்பதால் அலுவலக பணி முடிந்து ஊராட்சிஒன்றிய அலுவலகத்திலேயே தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அலுவலக பணி முடிந்து விட்டு, ஒன்றிய குழுத் தலைவரின் அறையின் அருகே உள்ள மற்றொரு அறையில் நேற்று இரவு பணி முடிந்து  உறங்கச் சென்றார். இன்று காலையில் அலுவலக பணியாளர் இசக்கி என்பவர் அவருடைய அறையில் சென்று பார்த்த பொழுது, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் இறந்து கிடந்துள்ளார்.இதனைக் கண்ட அலுவலர் இசக்கி உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காவல்துறையினர் சுப்பிரமணியன் இறப்பை குறித்து அதிகாரிகள் மற்றும் அலுவலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய சுப்பிரமணியன் திடீரென மரணமடைந்தது அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News